பணிவுடன் கடமையாற்றுங்கள்
UPDATED : ஏப் 11, 2016 | ADDED : ஏப் 11, 2016
* உயர் பதவியில் இருப்போர் கடைநிலை ஊழியர் போல பணிவுடன் இருந்தால் புகழ்நிலையில் முன்னணி வகிக்கலாம்.* புலன்களுக்கு அடிமையாகக் கூடாது. அறிவால் ஆட்டுவிப்பவர்களாக மாற வேண்டும்.* பொறாமை, சினம், தற்பெருமை போன்ற தீய குணங்களால் மனிதன் அமைதியின்றி தவிக்கிறான்.* மூச்சுக்காற்று உயிரையும், உடலையும் இணைப்பது போல வழிபாடு மனிதனைக் கடவுளோடு சேர்க்கிறது.* நாலு பேருக்கு நல்லது செய்ய விரும்பினால் எதிர்ப்பைச் சந்திக்காமல் இருக்க முடியாது.- சாய்பாபா