செய்யும் தொழிலே தெய்வம்
UPDATED : அக் 01, 2012 | ADDED : அக் 01, 2012
* எல்லா வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும், மனத்தூய்மை இல்லாவிட்டால் அதனால் பயன் இல்லை.* ஆரோக்கியமும், மனவலிமையும் பெற்றவர்கள் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய முற்பட வேண்டும். * நீதிபோதனைகளை மற்றவர்க்கு எடுத்துச் சொல்வது எளிது. ஆனால், கடைபிடிப்பது கடினம்.* தேடும் செல்வம் நம்மோடு வரப் போவதில்லை. அதனால், நம்முடைய பணம், பொருள், அதிகாரம், பெருமை அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிப்போம். * செய்யும் தொழிலே தெய்வம். எந்தப் பணியும் உத்தமமானது தான். அதில் விருப்பத்தோடு ஈடுபடும்போது அதன் மதிப்பு கூடுகிறது.* மனித வாழ்வை மரத்திற்கு ஒப்பிட்டால், நல்ல பண்பாட்டை வளர்க்கும் கல்வி அதன் வேராக அமைந்துள்ளது. * அன்பு வழியில் கடவுளின் திருவடியில் பக்தி செலுத்துங்கள். குழப்பம் நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.- சாய்பாபா