குழந்தைகளைத் தடுக்காதீர்!
* தொண்டு செய்பவர்கள் அனைவரிடமும் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொண்டுக்காக வந்திருப்பதால் நாம் பிறரைவிடச் சிறந்தவர்கள் என்றும், பக்தி மிகுந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்க கூடாது.* அர்ஜுனன் கிருஷ்ணனிடம் சரணடைந்தது போல், சரணாகதி மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால், அந்த இறைவனால் கூட உங்களை ஒன்றும் செய்ய இயலாது.* சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சேவகர்களாகிய உங்களை, சேவை பெறுகிறவர்கள் போற்றவும் செய்யலாம். தூற்றவும் செய்யலாம். உங்களுடைய கடமையை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். * சுய விருப்பத் தொண்டு என்பது அள்ளித்தெளிக்கும் அவசரச் செயல் அல்ல. தீவிர ஒழுக்க நெறி, நீண்டகாலப் பயிற்சி, பணிவு இவையில்லாமல் தொண்டினை நன்றாகச் செய்ய இயலாது.* குழந்தைகள் குறும்புத்தனமாக பேசுவார்கள். ஏதாவது படம் வரைந்து கிறுக்கித்தள்ளுவார்கள், இதை நாம் தடுக்கக்கூடாது, காரணம், அவர்கள் தங்களை மேதைகள் போல மனதில் கருதி செய்பவை இவை.-சாய்பாபா