காலத்தை வீணாக்காதீர்!
UPDATED : ஜூலை 15, 2012 | ADDED : ஜூலை 15, 2012
* சூரியனை பார்க்க விளக்கு தேவைஇல்லை. அதன் ஒளியிலேயே பார்க்கிறோம். அதுபோல, கடவுளைக் காண பிற சாதனங்களைவிட அருள் தான் தேவை.* பிரார்த்தனை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இருக்கக்கூடாது. மனதின் ஆழத்தில் இருந்து வருவதாக இருக்கவேண்டும். அதுவும் தனக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் இருக்க வேண்டும்.* மேகம் கலையும் வரை காத்திருந்தால் மட்டுமே, சூரிய ஒளியைக் காணமுடியும், அதுபோல் பொறுமையுடன் ஆன்மிகப்பயிற்சி செய்தால் மட்டுமே இறையருள் கிடைக்கும்.* ஒருவர் சேர்த்த செல்வம் வறுமைக் காலத்தில் பாதுகாப்பு தரும். நாம் செய்த புண்ணியம் துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.* காலம் மதிப்பு மிக்கது. ஒரு மணித்துளியைக் கூட வீணாக்கக் கூடாது. எதிர்காலத்தை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, இன்றைய கடமையைச் சரிவரச் செய்யுங்கள்.- சாய்பாபா