வேண்டாமே இலவசம்
UPDATED : ஜூன் 10, 2014 | ADDED : ஜூன் 10, 2014
* தெய்வ சந்நிதியில் தரையில் விழுந்து வணங்குவதால், மனிதனின் அகந்தை எண்ணம் அழிகிறது. * யாரிடமும் எதையும் இலவசமாக பெற முயற்சிக்க வேண்டாம். உழைப்பில் கிடைத்த வருமானத்தில் மகிழ்வுடன் வாழுங்கள். * ஆரவார கேளிக்கையை நாட வேண்டாம். எங்கு சென்றாலும் அந்த இடத்தில் உங்களால் அமைதி பரவட்டும். * கடலுக்கு அலையும், வானுக்கு நிலவும் போல, மனிதனுக்கு நேர்மையே அழகூட்டுகிறது. - சாய்பாபா