கடவுள் தந்த வெகுமதி
UPDATED : அக் 21, 2015 | ADDED : அக் 21, 2015
* எல்லா உயிர்களிலும் மனிதனே சிறந்தவன். கடவுள் அளித்த வெகுமதியான இப்பிறவியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.* மற்றவருக்கு அறிவுரை கூறுவது மிக எளிது. ஆனால், தன்னிடம் உள்ள குறைகளைப் போக்குவது கடினமானது.* பெற்றோரை மதிப்புடன் நடத்துங்கள். இளைஞரான நீங்களும் வருங்காலத்தில் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும்.* மலர் போல மனம் இருக்க வேண்டும். அதில் நல்லெண்ணம் என்னும் நறுமணம் பரவ வேண்டும்.- சாய்பாபா