உள்ளூர் செய்திகள்

கடவுளிடம் சரணடைவோம்

* எனக்கு எல்லாம் நீயே என்று சரணாகதி அடைந்து விட்டால் கடவுளின் அருள் பூரணமாகக் கிடைத்து விடும். * பக்தி என்பது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. அதுவே வாழ்விற்கு சத்தான உணவாக உள்ளது. * ஆசைகளை நெறிப்படுத்தவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ளுங்கள். * சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீது தான், தர்மம் என்னும் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. * விலைவாசியைக் கட்டுப்படுத்துவதை விட, மனிதன் தன் மனதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். -சாய்பாபா