இமை போல் காப்பார்
UPDATED : ஏப் 01, 2015 | ADDED : ஏப் 01, 2015
* கண்ணை இமை காப்பது போல, கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்ற உண்மையை உணருங்கள்.* மனதை ரோஜா மலராக்குங்கள். அதில் நல்லெண்ணம் எனும் மணம் கமழட்டும்.* மிருக உணர்ச்சிகளைப் ஒதுக்கினால் மட்டுமே, மனதில் தெய்வீக உணர்வு அரும்பும்.* அடுத்தவரிடம் உள்ள குறைகளைக் காண்பது பாவம். பிறரின் நல்ல குணத்தை மட்டும் பாருங்கள்.* நல்ல செயல்கள் நிதி பற்றாக்குறையால் நின்று போவதில்லை. தக்க சமயத்தில், கடவுளின் அருளால் உதவி வந்து சேரும்.-சாய்பாபா