பெற்றோரே நற்பண்புகளை போதிக்கவேண்டும்
UPDATED : நவ 30, 2016 | ADDED : நவ 30, 2016
* வாழ்வில் தடை குறுக்கிட்டால் சோர்ந்து போகாதீர்கள். விடாமுயற்சியே மனிதனின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.* தெய்வத்திற்கு சேவை செய்வதை விட, வாழும் தெய்வமான மனிதனுக்கு சேவை செய்வது மேலானது.* பிள்ளைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுத் தரும் பொறுப்பு பெற்றோருக்கே அதிகம் இருக்கிறது.* ஒருமுறை கோபப்பட்டால் மனிதனுக்கு மூன்று மாத ஆரோக்கியம் போய் விடும். அதனால் கோபத்திற்கு சிறிதும் இடம் தராதீர்கள்.- சாய்பாபா