நேசக்கரம் நீட்டுங்கள்
UPDATED : டிச 21, 2014 | ADDED : டிச 21, 2014
* அச்சம் இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். பிறரைப் பயப்படும்படி செய்யாமலும் இருக்க வேண்டும்.* மனத்துாய்மை இல்லாமல் செய்யும் வழிபாட்டுக்கு பலன் கிடைக்காது.* இயற்கை அன்னையிடம் நேசக்கரம் நீட்டுங்கள். அவள் அளிக்கும் செல்வத்தை அளவோடு ஏற்று அனுபவியுங்கள்.* நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.* பகுத்து அறியும் சக்தி மனிதனுக்கு மட்டுமே உண்டு. அதை நன்மைக்காக பயன்படுத்துவது அவசியம்.- சாய்பாபா