உள்ளூர் செய்திகள்

அறநூல்களைப் படியுங்கள்

*நற்பண்புகள் கொண்ட வாழ்க்கை மிகவும் முக்கியமானது. இறைப்பணியாக நமது வாழ்க்கையை மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.* பஞ்ச பூதங்களால் ஆன இயற்கை இறைவனின் சொரூபமாக விளங்குகிறது. அதன் தூய்மையைக் கெடுத்தால், நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை பாழடைவதுடன் மனமும் மாசடையும். இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர்களாவோம். * அறவழி நூல்களைப் படிப்பதும், அனுபவம் மிக்கவர்களுடன் பழகுவதும், ஆண்டவனிடத்தில் முழுநம்பிக்கை வைப்பதும், அவதார புருஷர்களின் உபதேசத்தைப் பின்பற்றுவதும், பக்தி மார்க்கத்தில் வெற்றி கிடைக்க உதவி செய்யும்.*ஒரு தெய்வ உருவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதையே திரும்பத் திரும்ப எண்ணிப்பாருங்கள். உங்கள் நினைவிலும் வாக்கிலும் மீண்டும், மீண்டும் அந்தத் தெய்வ உருவமும், நாமமும் வரும். அதுவே மனதுக்கும், நாவிற்கும் இனிமைஇருக்கும்.-சாய்பாபா