உள்ளூர் செய்திகள்

கைகள் தந்த நோக்கம்

* பாலில் துளி விஷம் கலந்தாலும் வீணாகி விடும். அதுபோல, ஒரு தீய செயலில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் சிதைந்து விடும்.* அன்பின் ஒளியால் தான் ஆண்டவனைக் காண முடியும். எங்கும் அன்பை விதைத்து அதை அறுவடை செய்யுங்கள்.* பெற்றோரை நன்றியுணர்வுடன் பேணுங்கள். வாழ்வில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.* பிறரைப் புறம் பேசுவதிலும், அவர்களது குறை காண்பதிலும் நேரத்தை வீணாக்காதீர்கள்.* ஒரு வயிறு, இரண்டு கைகளைக் கடவுள் வழங்கி இருக்கிறார். இரு கைகளால் உழைத்தால் யாரும் பட்டினி கிடக்கத் தேவையில்லை.-சாய்பாபா