அன்புடன் ஆதரிப்போம்
UPDATED : ஏப் 13, 2015 | ADDED : ஏப் 13, 2015
* அளவாக உண்ணுங்கள். பயன் தரும் இனிய சொற்களைப் பேசுங்கள்.* மனக்கட்டுப்பாடும், நல்ல ஒழுக்கமும் சொர்க்கத்துக்கு நிகரான வாழ்வு தரும்.* யாைரயும் வெறுப்பது கூடாது. பிடிக்கா விட்டால் பழகாமல் இருப்பது நல்லது.* உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று அன்றாட வழிபாட்டில் வேண்டுங்கள்.* பயப்படுவதும், பிறரைப் பயமுறுத்துவதும் மிருகப்பண்பு. அன்புடன் அனைவரையும் ஆதரியுங்கள்.* மனிதப்பிறவி மீண்டும் கிடைக்காமல் போகலாம். அதனால் வாழ்வைப் பயனுள்ளதாக்குங்கள். -சாய்பாபா