உழைத்து வாழ வேண்டும்
* கடவுள் ஒரு வயிறையும், இரண்டு கைகளையும் கொடுத்திருக்கிறார். அவன் இரண்டு கைகளாலும் கஷ்டப்பட்டு உழைத்தால் பட்டினி கிடக்கத் தேவைஇல்லை.* உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். காரணம் அறிந்தாலும், அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் தெய்வம் தான்.* உன்னிடம் உள்ள முழுமையான தெய்வத்தன்மையை அலட்சியம் செய்துவிட்டு, அதை பிறரிடம் தேடுவதால் அது துன்பத்தையே ஏற்படுத்தும். ஆதரவற்றவன், பலகீனன், தாழ்ந்தவன் என்று உன்னை நீயே இழிவுபடுத்திக் கொள்கிறாய். கோழைத்தனமும், தன்னைக் குற்றங்காணலும் தெய்வச் சுடரின் பொறியாகாது.* மனிதனுக்குச் செய்யும் தொண்டு கடவுள் தொண்டைவிட மேலானது. கடவுளுக்கு உன் சேவை தேவையில்லை, மனிதனை மகிழ்ச்சிப்படுத்துபவன் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துபவனாகிறான்.* இரவில் குளிர் அதிகரிக்கும் போது கம்பளியால் உன்னைச் சுற்றி இழுத்துக் போர்த்திக் கொள்கிறாய். அதுபோல் துன்பம் உன்னைத் தாக்கும் போது, மனதைச் சுற்றிக் கடவுள் திருநாமம் என்னும் கதகதப்பை அமைத்துக் கொள்ள வேண்டும்.-சாய்பாபா