இப்படியும் வீடு கட்டலாம்
UPDATED : செப் 14, 2012 | ADDED : செப் 14, 2012
* பால், பழம், விதைகள் போன்ற உணவை சாப்பிடுங்கள். அது நல்ல சிந்தனைகளை தரும்.* எப்போதும் இறைவனைச் சார்ந்து, அவரையே எண்ணிக்கொண்டிருங்கள். அதுவே மிகப்பெரிய தியானம்.* சேவை செய்வதை ஒரு வீடாகக் கருதினால் அதன் சுற்றுச்சுவராக உதவியும், மேற்கூரையாக தெய்வத்தன்மையும், வீட்டு உரிமையாளராக ஞானமும் இருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் அடித்தளமாக மனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வீட்டினால் பயன் ஏதுமில்லை.* விருப்பங்களின் தொகுப்பே மனம். ஆனால், விருப்பமில்லாத மனம்தான் சுத்தமாக இருக்கும்.* இறைவன் ஒவ்வொருவரிடமும் அமைதியின் மூலமாகவே பேசுகிறார். ஆகவே, அமைதியாக இருக்க முயற்சியுங்கள்.* இறைவன், உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்தைப்போல இருக்கிறார் மனப்பூர்வமான பக்தியினால், இறைநிலையை யாராலும் அடைய முடியும். இதில் ஆண், பெண் பேதம் கிடையாது. - சாய்பாபா