இதப்படிங்க முதல்ல....
ரஜினி - வடிவேலு மீண்டும் கூட்டணி! கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுடன் இணையும்போது, ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் வகையில், காமெடி செய்திருப்பார், ரஜினி. குறிப்பாக, சந்திரமுகி படத்தில், ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி காட்சிகளை, அத்தனை எளிதில் மறந்து விட முடியாது.இந்நிலையில், ரஜினி நடிக்கும், 169வது படத்தில், காமெடி துாக்கலாக இருப்பதால், வடிவேலுவை மீண்டும் இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அதனால், 'இந்த படத்திலிருந்து, 'ஆக் ஷனை' சற்று ஓரங்கட்டி, படத்துக்கு படம் காமெடி, 'கவுன்ட் டவுணை' ஆரம்பிக்க தயாராகி விட்டேன்...' என்கிறார், ரஜினி.— சினிமா பொன்னையாநயன்தாரா போடும், சூப்பர் கணக்கு!தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி பாலிவுட் வரை பரவலாக நடித்து வரும், நயன்தாரா, எப்போதுமே அரை டஜன் படங்கள் வரை கைவசம் வைத்திருக்கிறார். அதுபற்றி கேட்டால், 'சினிமாவில் நடிக்கத் துவங்கி இத்தனை ஆண்டுகளில் எந்த படம் ஓடும், எது ஓடாது என்பதை கணிக்கவே முடியவில்லை. அதனால், கைவசம் பல படங்கள் இருக்கும்போது, அதில் சில படங்கள் தோல்வியடைந்தாலும், ஓரிரு படங்கள் வெற்றி பெற்று மார்க்கெட்டை சரிய விடாமல் காப்பாற்றி விடும்.'அதனால் தான், ஓரிரு படங்களையே நம்பி இருக்காமல், ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்விக்கு பிறகுதான் இப்படியொரு, 'ரூட்'டை பிடித்தேன்...' என்கிறார்.— எலீசாசாய் பல்லவியின், 'வீக் பாய்ன்ட்!' தெலுங்கு சினிமாவின், 'நம்பர் ஒன்' நடிகையாக வலம் வரும், சாய் பல்லவி, முன்னணி 'ஹீரோ'களுக்கு இணையாக, தன் கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று நிபந்தனைப் போட்டு நடித்து வருகிறார். மேலும், அதிரடி நடனமாடி தன்னை கவர்ந்த 'ஹீரோ'களின் படங்கள் என்றால், ஓரளவு விட்டுக் கொடுக்கிறார்.'இதற்கு முக்கிய காரணம், பாடல் காட்சிகளில், அவர்களுக்கு இணையாக நானும் போட்டி போட்டு நடனமாட வேண்டும் என்ற ஆர்வத்தில் தான்...' என்கிறார். இப்படி ஒரு, 'வீக் பாயின்ட்' சாய் பல்லவியிடம் இருப்பதை தெரிந்து கொண்ட இயக்குனர்கள், 'டம்மி'யான, 'ஹீரோயின்' வேடங்கள் என்ற பட்சத்தில், தெலுங்கு சினிமாவில் அதிரடி நடனமாட கூடிய, 'ஹீரோ'களின் கால்ஷீட்டை வசப்படுத்திய பின், அவரைத் தேடி செல்கின்றனர். அத்தகைய, 'ஹீரோ'களின் பெயரை கேட்டதும், கதையைக் கூட கேட்காமல், சரண்டர் ஆகி விடுகிறார், சாய் பல்லவி.— எலீசாஅன்புக்கட்டளை!'தம்' மற்றும் சரக்கு அடிப்பது போல் நடித்து வந்த, ஆண்ட்ரியா, இப்போது, அந்த, 'இமேஜில்' இருந்து மாறி வருவதோடு, அரை நிர்வாண காட்சிகளிலும் நடிப்பதில்லை என்று திட்டவட்டமாக கூறி வருகிறார். சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து, அதிகமாக பேசி வருபவர், சமீபத்தில், தன் பிறந்தநாளன்று, ரத்த தானம் செய்தார். அதோடு, தன் ரசிகர்களையும் ரத்த தானம் செய்யுமாறு அன்புக்கட்டளை போட்டிருப்பவர், 'பிறருக்கு, சரியான நேரத்தில் தேவைப்படும் உதவியை செய்வதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைப்பதில்லை...' என்று, தெரிவித்துள்ளார்.— எலீசா'டேரா' போட்ட, மலையாள வில்லன்!தமிழில், வேலைக்காரன், தெலுங்கில், புஷ்பா போன்ற படங்களில், வில்லனாக மிரட்டினார், மலையாள நடிகர் பகத் பாசில். தற்போது, தமிழில், கமலஹாசனின், விக்ரம் படத்தில், வில்லனாக நடித்துள்ளார். இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.இந்த சூட்டோடு, தமிழ், தெலுங்கில், வில்லன் மார்க்கெட்டை, 'ஸ்டெடி' செய்ய வேண்டும் என்பதற்காக, சென்னையில், 'டேரா' போட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப, தீவிர முயற்சி எடுத்து வரும், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா போன்ற நடிகர்களுக்கு, இது, கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.சினிமா பொன்னையாசினி துளிகள்!* கபாலி, லாபம் என பல படங்களில் நடித்த சாய் தன்ஷிகா, தற்போது, மனோகரி என்ற படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார்.* அண்ணாத்த படத்தை அடுத்து, இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து, சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்துள்ள, கீர்த்தி சுரேஷ், அடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.அவ்ளோதான்!