உள்ளூர் செய்திகள்

நேர்மைக்கு மறுபெயர் கலாம்!

கடந்த, 2006, மே மாதம், ராமேஸ்வரத்திலிருந்து, 53 பேர் டில்லி ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர், அன்றைய ஜனாதிபதி, ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உறவினர்கள். அவர்களை, ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்தார் செயலர் பி.எம்.நாயர். 'ஜனாதிபதி மாளிகை வாகனங்களோ, மற்ற சிறப்பு வசதிகளோ அனுமதிக்க வேண்டாம்...' என்று கலாம்ஜி கூறினார். ஜனாதிபதி மாளிகையில் தங்கிய ஒரு வாரம், அவர்களுக்காக, 3 லட்சத்து, 54 ஆயிரத்து, 924 ரூபாய் செலவு ஆனது. மாளிகை கன்ட்ரோலரை அழைத்து, செலவு ஆன பணத்துக்கு ரசீது போட்டு எடுத்து வரச் சொன்னார். உறவினர்கள் ஊருக்கு போன பின், இந்த தொகையை தன் சொந்த பணத்திலிருந்து கட்டினார் கலாம்ஜி. 'இந்த சமாசாரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது...' என்றார். அவர் மரணம் அடையும் வரை, செயலர், பி.எம்.நாயர் இதை வெளியே சொல்லவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !