உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - உனக்கான திசை!

மலர்கள்கீழே வீழவில்லை எனில்கனிகள் ஏது?மரம் இலைகளைஉதிர்க்கிறது எனில்துளிர்கள் வருமென்றநம்பிக்கையில் தானே!சேமித்த நீர்த்துளிகளைமேகம் சிந்துவதால் தானேமழையும், நதியும், அருவியும்மற்றும் உலகில் உள யாவும்!நிலவின் தேய்வுதோல்வியா என்ன...அது முழு பிறை காணும்முயற்சியில் தானேஒவ்வொரு திங்களும் ஓடுகிறது!பூமியின் ஒரு பக்கம்இருள் தரும் சூரியன்மறுபக்கம் ஒளி தானேதந்து கொண்டிருக்கிறான்!வாழ்க்கை நாளும் உன்னைவாட்டி எடுக்கிறதா...திக்கு தெரியா காட்டைப் போல்கண்ணாமூச்சி காட்டுகிறதா?கொஞ்சம் தலையுயர்த்திப் பார்முடிவிலியாய் தெரியும் வானத்தில் கூடபறவைகள் திசையறியும் போதுஉன் பாதச் சுவடுகளுக்குக் கீழ் இருக்கும்பூமியில் உன்னால் திசையறிய முடியாதா!இ.எஸ். லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !