கவிதைச்சோலை! - இந்தியா... ஓர் தாய்நாடு!
மிகப்பெரிய அமைதிநம் மனதிற்குள் உள்ளதுஆனால், மிகச்சிறிய போரால்தோற்கடிக்கப்படுகிறோம்!மிகப்பெரிய நம்பிக்கைநம் மனதிற்குள் உள்ளதுஆனால், மிகச்சிறிய அவநம்பிக்கையால்தோல்வி அடைகிறோம்!மிகப்பெரிய அன்புநம் மனதிலே உண்டுஆனால், மிகச்சிறிய பகையால்பிரிவுகள் ஏற்படுகிறது!மிகப்பெரிய மன்னிப்புநம் மனதிலே ஓடுகிறதுஆனால், மிகச்சிறிய வன்மத்தால்ரணமாக்கப்படுகிறோம்!மிகப்பெரிய வலிமைநம் மனதிற்குள் உள்ளதுஆனால், மிகச்சிறிய துரோகத்தால்வீழ்த்தப்படுகிறோம்!மிகப்பெரிய அரவணைப்புநம் எல்லாரிடமும் உண்டுஆனால், மிகச்சிறிய பிரிவினையால்இழக்கப்படுகிறோம்!மிகப்பெரிய நட்புநம் வாழ்வை அலங்கரிக்கிறதுஆனால், மிகச்சிறிய கூடா நட்பால்கேடாய் முடிகிறது!மிகப்பெரிய பொது நலம்நம் எல்லாரிடமும் உண்டுஆனால், மிகச்சிறிய சுயநலத்தால்பெரிதும் பாதிக்கப்படுகிறோம்!மிகப்பெரிய நீதிநம் நாட்டில் உள்ளதுஆனால், மிகச்சிறிய அநீதியால்நிர்மூலமாக்கப்படுகிறோம்!மிகப்பெரிய ஜனநாயக நாடாகஇந்தியா உள்ளதுஅதனால், உலகிற்கே தாய்நாடாய்நாம் உருவாக்குவோம்!கோ. சந்திரன், சென்னை.