உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - நீ அற்புதமானவன்!

கண்ட கனவுகள்பலிக்குமெனநம்பிக்கை விதைகளைஇதயத்தில் ஊன்று!அவநம்பிக்கைமனிதர்களைஅடியோடுஒதுக்கி விடு!முயலாமைஉடையோரைஅயலானாய்தள்ளி விடு!அறிவிலிகளோடுசேர்ந்துஅறியாமை இருளுக்குள்அணைந்து விடாதே!தோல்வியின் முகவரிகள்துரத்தி வந்தாலும்மனதை துவள விடாதே!இறைவனின் படைப்பில்எதுவும் பயனுள்ளபாத்திரமேஇதை மனதிற்கொள்உன்னை உயர்வாய்நினைத்துக்கொள்!உன் நம்பிக்கைகுறையும்போதுஇறை நம்பிக்கையைமனதில் பிணைத்துக்கொள்!உன்னால் முடியுமெனநீ நினைத்தால்இமயம் கூடஉன் காலடியில்மண்டியிட்டுஉனை வணங்கும்!இறைவனின் படைப்பில்நீ அபூர்வமானவன்நீ பூமித்தாயின்நேசக் குழந்தைஉன்னால்புவி மலரட்டும்இதயங்கள் சிரிக்கட்டும்!சங்கீதா சுரேஷ், தர்மபுரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !