உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்!கீழடிகொடுத்த ஒரே அடியில்,மொகஞ்சதாரோஹரப்பாவின் கர்வங்கள் இப்போதுமண்ணில் புதைந்து போனது!நதியின் கரையில்நாகரிகம் வளர்ந்ததுஎன்று வரலாறு சொன்னாலும்அதற்கு, தொட்டில் கட்டியதுதமிழனுடையகீழடி! இந்தியாவின் உச்சி கிளையானசிந்து சமவெளி முதல்கடைக்கோடி கீழடி வரைதமிழ் வேர் பரவிஇருக்க...நான் தான் பழமை என்றுசில மொழி காளான்களின்கூச்சல், இனி, மண்ணோடுமண்ணாகட்டும்!புதைந்த தங்கத்தில்'தக தக'க்கிறதுபழந்தமிழர் நாகரிகம்!கிடைத்த மண் பாண்டங்களில்சமைக்கப்பட்டதமிழன் பண்பாடுஇன்னும் கெடாமல்இருக்கிறது!கி.மு., - கி.பி., என்பதுஇனி, த.மு., - தமிழனுக்கு முன்த.பி., - தமிழகனுக்கு பின்என்று மாறட்டும்!விலை உயர்ந்த தந்தங்களில்ஆபரணங்களை செய்துஆதி தமிழன் பயன்படுத்தி இருக்கிறான் என்றுகீழடி சொல்கிறது...ஆனால், இன்றோ,ஆங்கில முலாம் பூசப்பட்டுஏனோ கவரிங் நகையாகமாறிக்கொண்டு வருகிறான்!எது எப்படியோ,கீழடிஅகழ்வாராய்ச்சியில் அழியாமல்எழுதப்பட்டு விட்டது...தமிழன் தான்உலக புத்தகத்தின் முதல் அடி என்று!ந. வீரா, திமிரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !