கவிதைச்சோலை!
இரு ஸ்வரங்கள்!சப்த ஸ்வரங்கள் ஏழு...அந்த வரிசையில் வராதஇரு ஸ்வரங்கள், சிசு!இரு ஸ்வரங்கள் என்றாலும்இவையும்சப்த ஸ்வரம் தான்!ஸ்வரங்கள் சேரஅற்புதமாய் ராகம் பிறக்கிறது!இங்கே -ராகங்கள் சேர அதிசயமாய்இரு ஸ்வரங்கள் பிறக்கின்றன!துயில் ராகம் நீலாம்பரிஅது ஜனிக்கஸ்வரங்கள் விழித்திருக்க வேண்டும்!இங்கோ -இந்த இரு ஸ்வரங்கள் துயிலநீலாம்பரி விழித்திருக்கிறது!ஏழு ஸ்வரங்கள்ஏற்படுத்தும் அதிசயத்தை விடஇந்த இரு ஸ்வரங்கள்புலப்படுத்தும் இன்பம் அலாதியானது!குழலையும், யாழையும் விடசிசுக்களின் குரல் இசைசிலாகிதமானது!ஸ்வரங்களை கூட்டி கூட்டிஇசை மீட்டிப் பிறக்கும்ராக மாலிகாவை விடஎந்த சிரமும் இல்லாமல்எடுக்கும் கரங்களிலும்அணைக்கும் மார்பிலும்ஆனந்த ராகத்தை கொடுப்பதுசிசு என்னும்இரு ஸ்வரங்கள் மட்டுமே!இந்த இரு ஸ்வரங்களில்ஆண் - பெண் பேதங்கள்அவசியமில்லாததுஅருவருக்கத்தக்கது...காரணம் - இந்த இரு ஸ்வரங்கள்இசை ஸ்வரங்கள் அல்லஇறைவனின் வரங்கள்!சு. விஜயலெட்சுமி, கடம்பூர்.