கவிதைச்சோலை!
வாழக் கற்றுக்கொள்!அவமானம் படுத்தியவரால்தன்மான வாழ்க்கைபெற்றேன்!அலட்சியம் செய்தோரால்லட்சியம் வகுத்து வென்றேன்!வீழ்த்தி சிரித்தோரால்எழுந்து நிதானமாய்நடந்தேன்!தாழ்த்தி பழித்தோரால்நம்பிக்கை செழிப்பில்உயர்ந்தேன்!ஒதுக்கி நகைத்தோரால்என்னை செதுக்கிநிமிர்ந்தேன்!காயப்படுத்தி களித்தோரால்அன்பே ஆலயமெனதொழுதேன்!ஏளனத்தால் ரணமாக்கியவரால்இலக்கிற்கான களம்அமைத்தேன்!அழ வைத்து ரசித்தோரால்நிலைத்த புன்னகைகற்றேன்!உறவுகளின் நகைப்பால்தன்னம்பிக்கை தழைக்கநிலைத்தேன்!நட்பே நரகமானதால்நெஞ்சத்தில் நம்பகம்விதைத்தேன்!அவனை விட்டொழிங்கபழித்து தனித்தோரால்பாராட்டப்பட்டேன்!முனைந்து முடமாக்கிமுண்டாசு கட்டியோரால்விவேக தடம் அமைத்துபுதிய வேதமாவேன்!என் மீதுவீசப்படும் கற்களையேஅழகு சிலைகளாய்படைப்பேன்!வசைப்பாடும் சொற்களையேஇசையாக்கி யாழிசைமீட்டுவேன்!விடியலே நானாகிசூரிய ஒளி பரப்பிகாட்டும் திசையெல்லாம்மடமையை விரட்டிமகிழ்வேன்!இனி கொட்டும் முரசொலியில்என் பெயர் ஒலிக்கவியர்க்கும் வியர்வையில்விருட்சமாவேன்வீழ்வேனென்று நினைத்தாயோ...பாரதியே, உன் பட்டாக்கத்திவார்த்தைகள் தான்என் வாழ்க்கை!வேதை. ரா.மாரியப்பன்சென்னை.