உள்ளூர் செய்திகள்

கவிதைசோலை!

மதம் ஏறிய ஜாதி!உன்னிலும் என்னிலும்ஓடுவது ஒரே ரத்தம்மறுப்பதற்கு மனங்கள் உண்டா?விண்ணிலும், மண்ணிலும்கேட்பது நம் ஒரே சத்தம்இல்லையென்று சொல்லஇதயங்கள் உண்டா?அன்னையின் பாலில் ஏது ஜாதி சாயம்ஆண்டவன் தோளில்இல்லை அதிகார வர்க்கம்!அன்றாடம் உதிக்கும்ஆதவனுக்கு ஆணவம் இல்லைஆகாயம் உலவும்நிலவுக்கு அகந்தை இல்லை!பள்ளத்தில் புயலாகவும்சிகரத்தில் தென்றலாகவும்பாகுபாடு பார்ப்பதில்லை காற்று!அருவியில் ஒரு சுவையென்றும்ஆற்று நீரில் ஒரு சுவையென்றும்தரம் பார்த்து தாகம்தீர்ப்பதில்லை தண்ணீர்!பசி அடக்கும் சாதத்திற்குஜாதி பெயர்கள் தெரிவதில்லைவாசம் தரும் மலர்கள்மத உறவுகள் அறிவதில்லை!படித்தும் பட்டம் பெற்றும்பாழுங்கிணற்றில் விழும் மானிடனேபகுத்தறிந்து பார்!மூட்டை கட்டிய உந்தன்மூளையில் தான் மொத்த இருளும்அறிவு சுடரேற்றி விலக்குஅத்தனை ஆணவத்தையும்!ஒரு தாய் மக்கள் நாமெல்லாம்உதவாக்கரை ஆவதாஜாதி மதம் பிடித்து சகலத்துக்கும்சண்டையிட்டு சாவதா!எவரேனும் ஏளனம் செய்யுமுன்னேஓரணியில் திரளுவோம் நாம்ஏற்றத் தாழ்வு இனி இல்லையென்றுஇறைவனடி பறை சாற்றுவோம் நாம்!சமரசம் தான் சந்தோஷமென்றுபரவசமாய் பாடிடுவோம்பாரினில் இனி நாம் என்றென்றும்!க. அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !