பாலூட்டும் புரட்சி!
விலங்குகள் கூட தங்கள் குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுப்பது இல்லை. ஆனால், சில பெண்கள் பாலூட்டினால், தங்களது மார்பழகு போய்விடும் எனக் கருதி, பிறந்த குழந்தைக்கு கூட பாலூட்ட மறுக்கின்றனர். இத்தகைய பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐரோப்பாவில், பொது இடங்களில் சாலை ஓரங்களில் அமர்ந்து, குழந்தைகளுக்கு பால் புகட்டுகின்றனர் சில சமூக ஆர்வலர்கள். இதை பார்த்தாலாவது, பெற்ற குழந்தைகளை பற்றிய ஞாபகம் வர வேண்டும்.— ஜோல்னாபையன்.