உள்ளூர் செய்திகள்

வருகிறது மாநில அடையாள அட்டை!

நம் நாட்டு குடிமக்களுக்கு, 'ஆதார்' என்ற அடையாள அட்டை வழங்குகிறது, மத்திய அரசு. இதைப்போல மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு, தனி அடையாள அட்டை வழங்க இருக்கிறது, அந்தந்த மாநில அரசு. நாட்டில் முதன்முதலாக இந்த அடையாள அட்டை வழங்கும் மாநிலம், கேரளம். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிற இந்த அட்டையில், ஒருவரை பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும். அரசு சம்பந்தமான அனைத்துக்கும் சான்றாக பயன்படுத்தப்படும் இந்த அடையாள அட்டை, 'நேட்டிவிட்டி கார்ட்' என அழைக்கப்படுகிறது. படத்தில் காண்பது தான், அட்டையின் தோற்றம். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

visu
ஏப் 24, 2026 16:42

பேசாமல் ஒவ்வொரு MP தொகுதியையும் ஒரு மாநிலமாக அறிவித்து விடுங்கள் 6 MLA தான் மந்திரிகள் நிர்வாகம் ஒழுங்கா நடக்கும் பிரிவினைவாதம் பேச மாட்டாங்க பல துறைகளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளலாம் இல்லாவிட்டால் இப்படித்தான் நேட்டிவிட்டி கார்டு என் ஆரம்பித்து பக்கத்து மாநிலத்துக்காரனை ஒதுக்குவாங்க


KRISHNAN R
ஏப் 24, 2026 11:03

தேவையே இல்லாதது


Gurumurthy Kalyanaraman
ஏப் 22, 2026 13:11

எதுக்கு எங்களுக்கு ஆயிரத்து எட்டு அட்டை? பங்களாதேஷிகளையும் ரொஹின்யாகளையும் விரட்டிவிட்டால் போதும். அட்டை மேல் அட்டை கொடுத்து எஙகள் ரத்தத்தை உறிஞ்ச வேண்டாம். முதலில் மம்தாவை விரட்டி விட்டால் இந்த இரண்டு கூட்டமும் இந்தியாவில் வந்து ஆதார் காரடையும் பெற்று குடிமகனாய் மாறுவது நிற்கும்.


Moses Viyas
ஏப் 22, 2026 03:13

ஏற்கனவே அந்த கார்டு இந்த கார்டுனு சொல்லி மக்களை வாட்டி எடுத்து வருகிறீர்கள் இதில் இது வேற, நல்லா இருக்கு உங்க அரசியல் பித்தலாட்டம்...


Moses Viyas
ஏப் 22, 2026 03:06

இப்படி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் இன்னும் பத்து வருடத்தில் விளம்பரப்படுத்தி நம்மை வாங்க வைத்துவிடுவார்கள் வேண்டுமென்றால் பாருங்கள்... பரிதாபநிலையில் இருக்கும் நாம்..


Kaliselvi Elango
ஏப் 20, 2026 21:24

ஆதார் குழப்பமே இன்னும் தீர்ந்த பாடு இல்லை.. வாழ்க்கை முழுவதும் அடையாள அட்டைகள் திருத்தம் செய்வதிலேயே கழித்து விடும் போலிருக்கிறது..


K.Nagarajan
ஏப் 20, 2026 20:25

Nativity Card why necessary?When we are Aadhaar card then why this Nativity Card?What is the use of this card?People are all details in Aadhaar card then why there will be an Nativity Card?As a responsible Govt should nt torture public unnecessarily.


K.Nagarajan
ஏப் 20, 2026 20:10

இந்த நேட்டிவிட்டி கார்டு தேவை எதற்காக?என்பதை விளக்க வேண்டும்.ஆதார் கார்டிலேயே எல்லா விபரங்களும் பதிவாகி இருக்கும் நிலையில் இது தேவையில்லாத ஒன்றாகவும் சிரமத்திற்குள்ளாவதற்காகவும் மட்டுமே அரசு செயல்படுவதாக மக்கள் கவலையடைகின்றனர்.இதைவிட எவ்வளவோ முக்கியமான நன்மைகள் இருக்கும்போது மக்களை அலைக்கழித்து பொருளாதார ரீதியாகவும் அவர்களை நஷ்டப்படுத்தி மன உளைச்சலையும் உருவாக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.மாநில அரசு ஒரு பக்கம் மத்திய அரசு ஒரு பக்கம் நின்றுகொண்டு மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல் செயல்பட்டால் இது ஜனநாயக நாடு தானா அல்லது சர்வாதிகார நாடா?என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.


karthik
ஏப் 20, 2026 12:28

தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதில் இந்திய அரசியவாதிகள் முதலிடத்தில் இருக்கிறார்கள்..அரசியலுக்கே லாயக்கில்லாதவர்கள்


Dr S Venkatraman
ஏப் 20, 2026 09:42

இதற்கு அவசியம் இல்லை. மத்திய அரசும் மாநில அரசும் மக்களுக்காக என்பதை மறக்கும் மாநில அரசுகளின் மமதை நிலை