உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: உன்னில் தொலைந்த என்னை...

இரவெல்லாம் ஒட்டி உறவாடி விடியற் நேரம் நாணத்தோடுவிட்டுப்பிரிய மனமின்றிஒட்டிப்பிரியும்புல் நுனி பனித்துளி போல்உன் நினைவுகள்...கரை மோதிகாதலியை காணாமல்ஏமாற்றத்துடன்கரையிலேயே காத்துக் கிடக்கும்கடற் நுரை போல்என் உயிர் உனக்காககாத்துக்கிடக்கிறது!கொலுசொலியில் பாதை மயங்கிகல் தட்டி நகக்கண் பெயர,'அம்மா' என்று நான் அலற'அச்சச்சோ' என எனக்கே எனக்காய் நீ வீசிய பரிவுப் பார்வை...அன்றுஉன் பார்வை தந்த போதையில் அடிமையான என் பாதங்கள்உன்னை காணும் போதெல்லாம்பாதையில் கற்களை தேடுகின்றன!மார்கழி மாத பனிக்காற்றுஎன் முகத்தை வருடும் பொழுதெல்லாம்பேருந்தில் எதேச்சையாய் என் முகத்தை வருடியஉன் கூந்தலின் நினைவுகள் என்னுள் பசலையை கிளறிவிட்டு போய்விடுகிறது!நீ குப்பையில் வீசியவைகள்எல்லாம் பொக்கிஷமாய்என்னுடன்...உன் நினைவுகளில் என்னை நான் புதுப்பிக்கிறேன்சில சமயம் தொலைத்துவிட்டு தேடுகிறேன்!ஊர் எல்லையில்தனியே நிற்கும் சுமை தாங்கியைப் போல்சுகமான உன் நினைவுகளை தாங்கிகாத்துக் கிடக்கிறேன்உன் வருகைக்காக!உன்னில் தொலைந்த என்னை என்னிடம் திருப்பித்தர என்னிடம் நீ வருவாயா?—  எஸ்.ஏ.சரவணக்குமார், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !