உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: சொந்தம்!

சின்னஞ் சிறிய குண்டூசி பல தாள்களை இணைக்கிறது! சிறிய ரப்பர் பேண்ட்பல முடிக் கற்றைகளை பறக்க விடாமல் ஒருங்கிணைக்கிறது! ஒரு துளி மை பல பக்கங்களில்தடையில்லாமல் எழுதி விடுகிறது! ஒரு குவளை தண்ணீர் தொட்டிச் செடியை மலர வைக்கிறது!ஒரு பருக்கை சாதம்பல எறும்புகளின்பசி போக்கும் வாழ்வாதாரமாகிறது! ஒரு ஊசி மருந்துபல நோய்களை கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது! இரண்டடி குறள்காலமெல்லாம் மனித வாழ்வியலுக்கு பாடம் நடத்துகிறது! கனிவான வார்த்தைகளும்கள்ளமில்லா செயல்களும்நல்ல எண்ணங்களும்தேவையான அறிவுரைகளும் உங்கள் சுற்றம் நட்புவட்டத்தில் உங்களைமா மனிதர் எனும் நற்பெயரை சொந்தமாக்கி விடும்!— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.தொடர்புக்கு : 94445 85858


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !