உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

உப்பார்பேட், : மேம்பாலத்தில் இருந்து குதித்து, தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.ஹாசனை சேர்ந்த திம்மராஜு, 40, பிழைப்புக்காக பெங்களூரு வந்திருந்தார். ஹோட்டல் ஒன்றில் பணியாற்றினார். அறை ஒன்றில் தங்கியிருந்தார். இவர் நேற்று அதிகாலை 3:00 மணியளவில், ஆனந்தராவ் சர்க்கிள் மேம்பாலத்துக்கு வந்து, மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை இதை கண்ட சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த உப்பார்பேட் போலீசார், உடலை மீட்டனர். தொழிலாளியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ