உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 27 மாவட்டத்தில் சரிந்த நிலத்தடி நீர்மட்டம்

27 மாவட்டத்தில் சரிந்த நிலத்தடி நீர்மட்டம்

திருப்பூர்:போதிய மழைப்பொழிவு இல்லாததால், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. பத்து மாவட்டங்களில் மட்டும் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்துள்ளது.தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலம் பிரதானமாக உள்ளது. தமிழக நீர்வள ஆதாரத்துறை சென்னை நீங்கலாக 37 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை கண்காணித்து வருகிறது.ஆண்டுதோறும் ஜூன் - செப்., வரை தென்மேற்கு மற்றும் அக்., - நவ., - டிச., மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது.கடந்த 2022 டிச., மாதத்தைவிட, 2023, டிச., மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது.நான்கு பருவங்களிலும் பரவலாக மழை பெய்தாலும் சராசரி அளவை விட மழை குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது தெரிய வந்துள்ளது. கடந்த 2022 டிச., மாதத்தைவிட, 2023, டிச., மாதம் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 3.72 மீட்டரில் இருந்த நீர்மட்டம் 6.32 மீட்டராக சரிந்துள்ளது.கோவையின் நீர்மட்டம் 7.45 மீ.,-ல் இருந்து 9.84 மீட்டராகவும் 4.69 மீட்டரில் இருந்த திருப்பூரின் நீர்மட்டம் 7 மீட்டராகவும் 3.46 மீட்டரில் இருந்த நாமக்கல் நீர்மட்டம் 5.56 மீட்டராகவும், 2.86 மீட்டராக இருந்த சேலம் நீர்மட்டம் 4.63 மீட்டராகவும், 3.32 மீட்டராக இருந்த திருச்சி நீர்மட்டம், 5.06 மீட்டராகவும் 3.32 மீட்டரில் இருந்த பெரம்பலுாரின் நீர்மட்டம் 5.04 மீட்டராகவும் குறைந்துள்ளது.திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, ராணிபேட்டை ஆகிய பத்து மாவட்டங்களில் மட்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, காஞ்சிபுரத்தில் 0.70 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.விவசாயம், தொழிற்சாலை குடிநீர் என பல்வேறு பயன்பாடுகளுக்கு நிலத்தடி நீர் கைகொடுத்து வருகிறது. உறிஞ்சும் அளவுக்கு ஏற்ப நிலத்தடிக்கு, மழைநீர் சென்றுசேர்வது இல்லை. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அதிகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பது மிக அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சோலை பார்த்தி
ஜன 18, 2024 22:59

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஒவ்வொரு கட்டிடத்திலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டாயமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள்.. மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி என்றார்கள்....ஆனால் கட்டுமரம் மக்கள் கிட்ட சொல்லுச்சு.. ஜெயலலிதா க்கு ஜோசியம் பார்த்தவங்க தோச நிவர்த்திக்காக தமிழ் நாட்டுல ஒரு கோடி குழி தொண்ட சொல்லி இருக்காங்க அதனால தான் மழை நீர் சேகரிப்பு க்காக குழி தொண்ட சொல்றாங்க னு சொன்னாக .....இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோங்க...மழை நீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம்னு...தி. .ருடர்கள்.... மு. .ன்னேறமட்டும்..... க. .ழகம்..........எப்பவுமே தன் நாட்டு மக்களுக்காக எதுவும் செய்யாது...தன் மக்களுக்காக மட்டுமே எதையும் செய்யும்


Kundalakesi
ஜன 18, 2024 16:06

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தானே எப்போதும்


R Kay
ஜன 18, 2024 15:32

குடியிருப்புகளை சுற்றி கான்க்ரீட் தரை அமைப்பதை தடுக்க வேண்டும். மழை நீர் எல்லாம் வீணாக கடலில் சென்றடைகிறது.


katharika viyabari
ஜன 18, 2024 14:37

கொள்ளு பேரன் பேத்திகளுக்கு இப்பவே பெப்சி, கொக்ககோலா லிட்டர் கணக்குல வாங்கி அடைச்சு வச்சிடுங்க.


ஆரூர் ரங்
ஜன 18, 2024 12:37

ஏரி, குளங்களுக்கு மழைநீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால்களில் ஏகப்பட்ட ஆக்கிரமிப்பு????. கோர்ட் உத்தரவிட்டும் பலனில்லை. பஞ்சாபில் ஆனது போல் இங்கும் 1000 அடிக்குக் கீழே நீர்மட்டம் போகும்


NALAM VIRUMBI
ஜன 18, 2024 11:25

37 மாவட்டங்களில் 27 ல் நிலத்தடி நீர் மட்டம் குறைத்துள்ளது என்றால் இது கவலை அளிக்கக் கூடிய செய்தியாகும். அரசு இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஒவ்வொரு கட்டடத்திலும் கட்டாயமாக்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இதில் அதிக கவனம் செலுத்தினார். அவர் மறைவுக்குப் பின்னர் இந்த செயல்பாடு கிடப்பில் போடப்பட்டது. நிலைமை மேலும் மோசம் அடையாமல் இருக்க தற்போதய அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரமாக செயல்பட வேண்டும். எதிர்கால சந்ததியினரை, பொது மக்கள் நினைவில் கொண்டு அக்கறையுடன் அரசின் அறிவுரையை ஏற்று செயல்பட வேண்டும். ஏனோ தானோ என்ற செயல் யாருக்கும் பயன் அளிக்காது.


duruvasar
ஜன 18, 2024 09:19

வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான் இது சோழர்கால ஒளவையாரின் மூதுரை. ஆனால் 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அணைகள் கட்டவில்லை ஆகையால் நீர் உயரவில்லை நிலைகள் வற்றி போயுள்ளன. ஆச்சரியமாக "குடி"உயர்ந்திருக்கிறது. அதன்காரணமாக எண்ணிபார்கமுடியாத அளவுக்கு கோன் உயர்ந்து எட்டாத உயரத்திற்க்கு. சென்றுவிட்டான்.


கனோஜ் ஆங்ரே
ஜன 18, 2024 16:00

ஆமா... ஐம்பது வருஷமா அணைகள் இவங்க கட்டல... உங்க மோடிஜி வந்து பத்து வருஷமாச்சு... ஒரு செங்க கல்லகூட எடுத்து வைக்கல....? சரி, மோடிஜி எத்தனை அணைகள் கட்டுனாரு... அவர் கட்டுனதே, மூவாயிரம் கோடியில் பட்டேல் சிலை...


NicoleThomson
ஜன 18, 2024 07:51

முட்டாள்கள் ஆட்சியாண்டாள் இயற்கை என்ன செய்யும் , ? நீர் நிலைகளை இணையுங்கள் என்று கூறினார் ஐயா அப்துல் கலாம் அவர் வருங்காலத்தை சிந்தித்து அதனை சொன்னார் , அனால் அதனை எதிர்த்த ராகுலுக்கு இன்னமும் ஒரு சிலர் வாக்களித்து கொண்டுள்ளனர் , என்ன சொல்வது ?


அப்புசாமி
ஜன 18, 2024 07:16

நாலு இஞ்ச் மழை பெஞ்சா நாப்பது இஞ்ச்சுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சிடறாங்க. ஊரில் இருக்க கிணறுகளை மூடியாச்சு. ஏரி, கண்மாய், அதுக்கு நீர் போகும் வழிகளை ஆக்கிரமிச்சாச்சு. பேசாம கடல் தண்ணீரை குடிக்க பழகிக்கோங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை