உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: முடிவெடுக்க முடியாமல் அ.தி.மு.க. திணறல்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: முடிவெடுக்க முடியாமல் அ.தி.மு.க. திணறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.பா.ஜ. உடனான உறவை முறித்துள்ள அ.தி.மு.க. வரும் லோக்சபா தேர்தல் மட்டுமின்றி 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ. உடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jmktvy9c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் பா.ஜ. உடனான உறவை முறித்துக் கொண்டதால் சிறுபான்மையின மக்கள் ஓட்டுகளை கவர பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நீண்ட காலம் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அ.தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டத்திலும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்கூட்டத்திலும் பழனிசாமி பங்கேற்றார்.சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவான கட்சி அ.தி.மு.க. என அக்கட்சி தலைமை கூறி வரும் நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றால் சிறுபான்மையின மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும். கும்பாபிேஷகத்திற்கு செல்லாவிட்டால் ஹிந்து மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழும். இதனால் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் அக்கட்சி தலைமை தவித்து வருகிறது.எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா என்று கேட்டால் இது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என நழுவி விடுகிறார்.நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச் செயலர் பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது 'அ.தி.மு.க. கட்சி ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது; பாகுபாடு பார்ப்பதில்லை. யார் வேண்டுமானாலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம்.'எனக்கு கால் வலி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் கும்பாபிேஷகத்தில் நானும் கலந்து கொள்வேன்' என தாமரை இலை தண்ணீர் போல் பதில் அளித்தார்.அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கே.பி.முனுசாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ''பழனிசாமிக்கு உடல் நலம் சரியான பிறகு ராமர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு செல்வது குறித்து முடிவெடுப்பார்'' என்றார்.நேற்று வரை ராமர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு செல்வது குறித்து அ.தி.மு.க. தலைமை எந்த முடிவையும் எடுக்கவில்லை.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Anantharaman Srinivasan
ஜன 13, 2024 21:06

பழனிசாமிக்கு கால்வலி யிருந்தாலென்ன? ஒரு ஆம்புலன்ஸ் புக் பண்ணி படுத்த படியே அயோத்திக்கு சென்று வரலாமே.


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜன 13, 2024 18:55

School ல படிக்கிற பையன் டீச்சர் எனக்கு வயிறு வலிச்சது உடம்பு வலிச்சது கால் வலிச்சதுன்னு சொல்ற மாதிரி சொல்லாம பேசாம நம்ம டபுள் வாட்ச் டக்ளஸ் சொன்ன மாதிரி 22 ம் தேதி என்னோட கொளுந்தியாளுக்கு வளைகாப்பு இல்லாட்டி என்னோட ஒண்ணுவிட்ட அக்கா மகளுக்கு கல்யாணம் என்று இப்படிப் பட்ட காரணத்தையாவது சாக்காக சொல்லியிருக்கலாம் அதவிட்டு சின்னபிள்ளத் தனமா பொருந்தாத பொய்யை சொல்லி வசமா மாட்டிக்கிட்டாரு உண்மையில் எடப்பாடி பாவம்தான்.


அப்பாவி
ஜன 13, 2024 18:47

இவருக்கு நான் கொடுத்த மரியாதையை காணாமல் போய்விட்டது


S.kausalya
ஜன 13, 2024 17:55

ஒரு பெண்மணி இங்கு கூறுகிறார். பொங்கலுக்கு stalin 1000 ருபாய் கொடுத்து உளளது நெய்,முந்திரி, திராட்சை வாங்கு vadharkkaam.. 4000,2500 என koduththadhu எல்லாம் stalin தானாம். ஆனால் எடப்பாடி இல்லையாம். இப்படி பட்ட முட்டைகளை நம்பி தான் எடப்பாடி காய் நகர்த்தி கொண்டு உள்ளார். ஸ்டாலினுக்கு இந்த மாதிரி ஆட்கள் தான் பெரிய.ஓட்டு வங்கி. இதில் அண்ணாமலை எப்படி வெளி வருவார் என தெரிய வில்லை


Suppan
ஜன 13, 2024 16:47

பழனி பாபாவுக்கு ஒரு ஆலோசனை. அயோத்யாவுக்கு ஒரு தொப்பி போட்டுக் கொண்டு செல்லுங்கள். நமாஸ் படியுங்கள். அப்படியே அங்கு கட்டப்பட்டு வரும் மசூதிக்கு குங்குமம் வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு வாருங்கள்.


N SASIKUMAR YADHAV
ஜன 13, 2024 13:31

இன்னும் கொஞ்சநாள் சென்றால் மத்தியரசால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான PFI மீதும் தடைவிலக்க சொல்லுவார் எட்டப்பாடியாரு . எல்லாம் ஓட்டுப்பிச்சைக்காக இந்துமத துரோகி


ஆரூர் ரங்
ஜன 13, 2024 13:05

கரசேவைக்கே தொண்டர்களை அனுப்பினார் .... பயப்படுகிறார் . சிலிண்டர் கும்பல் வாக்குவங்கி படுத்தும் பாடு.


konanki
ஜன 13, 2024 10:46

எம் ஜி ஆர் ஜெயலலிதா உயிரை குடுத்து வளர்த்த கட்சியை ஊத்தி மூடும் ஐயோ பாவம் எம் ஜி ஆர் தொண்டர்கள்


நடுத் தெரு நாராயணன் திருச்சி
ஜன 13, 2024 10:21

பிஜேபி நல்ல கட்சி


அப்புசாமி
ஜன 13, 2024 10:06

அரசியல் ரீதியாக புறக்கணிப்பதே அதிமுக வுக்கு நல்லது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ