உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான்; ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள்

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான்; ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலில், 43 தொகுதிகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு, நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் காரணம் என்பதை அரசு உணர்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், வரும் தேர்தலில் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=myt6y89v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு ஆகியவற்றை, உடனடியாக வழங்க வேண்டும்; ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.கடந்த 10ம் தேதி, ஜாக்டோ - ஜியோ, மாவட்ட அளவில் வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தியது. கடந்த 15ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்தது. அதற்கு முந்தைய நாள், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.அதைத்தொடர்ந்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். போர்க்களத்தில் நிற்கும்போது, புறமுதுகிட்டு ஓடுவது வெறுப்பாக உள்ளதாக கூறும் அவர்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, தேர்தல் சார்ந்த புள்ளி விபரங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அதன் விபரம்:

கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., 6,000க்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள், 29. இவற்றில் தி.மு.க., கூட்டணிக்கும் இரண்டாவதாக வந்த அ.தி.மு.க., கூட்டணிக்கும் இடையிலான மொத்த ஓட்டுகள் வித்தியாசம் 86,490. இது தவிர, 10,000 ஓட்டுகளுக்கும் குறைவான வித்தியாசத்தில், 14 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது. இவற்றில் மொத்த ஓட்டுகள் வித்தியாசம், 1 லட்சத்து 11,879.அதாவது, தி.மு.க.,வை விட குறைவாக, 2 லட்சம் ஓட்டுகள் பெற்ற காரணத்தாலேயே, 43 தொகுதிகளை, அ.தி.மு.க., இழந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அதோடு சேர்த்து, இந்த 43ஐயும் கைப்பற்றி இருந்தால், ஆட்சியை பிடித்திருக்கும்.இந்த தொகுதிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஓட்டுகளே, தி.மு.க., வெற்றிக்கு கைக்கொடுத்தன. இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோபத்தை தணிக்காவிட்டால், அது இந்த தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.இவ்வாறு அவர்கள், தங்கள் குமுறலை கொட்டியுள்ளனர்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 6,000க்கும் குறைவான

ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., கூட்டணி வென்ற தொகுதிகள்:தொகுதி - வித்தியாசம்தியாகராய நகர் - 137தென்காசி - 370காட்பாடி - 746விருத்தாசலம் - 862நெய்வேலி - 977ஜோலார்பேட்டை - 1,091அந்தியூர் - 1,275திருமயம் - 1,382தாராபுரம் - 1,393உத்திரமேரூர் - 1,622திருப்போரூர் - 1,947ராசிபுரம் - 1,952வாசுதேவநல்லுார் - 2,367மயிலாடுதுறை - 2,742திருச்செங்கோடு - 2,862அரியலுார் - 3,234பூம்புகார் - 3,299ராஜபாளையம் - 3,898செய்யூர் - 4,042குன்னுார் - 4,105வேளச்சேரி - 4,352பண்ருட்டி - 4,697திருப்பூர் தெற்கு - 4,709கடலுார் - 5,151உளுந்துார்பேட்டை - 5,256சங்கரன்கோவில் - 5,297ஊட்டி - 5,348ஜெயங்கொண்டம் - 5,452ராதாபுரம் - 5,925

10,000த்துக்கும் குறைவான ஓட்டுகள்

வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 14 தொகுதிகள்:தொகுதி பெயர் - ஓட்டுகள் வித்தியாசம்குன்னம் - 6,329அணைக்கட்டு - 6,390மதுரை தெற்கு - 6,515குடியாத்தம் - 6,901நாகப்பட்டினம் - 7,238காங்கேயம் - 7,331சேலம் வடக்கு - 7,588ஒட்டப்பிடாரம் - 8,510ஆண்டிபட்டி - 8,538ஈரோடு கிழக்கு - 8,904வேலுார் - 9,181கலசப்பாக்கம் - 9,222விக்கிரவாண்டி - 9,573பொன்னேரி - 9,689***- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Jay
பிப் 18, 2024 23:04

அரசு ஊழியர்களை இடது சாரி சிந்தனைகளில் மீள முடியாதவாறு மூழ்கடித்து விட்டனர் திமுகவினர். இப்பொழுது இப்பொழுது அரசு ஊழியர் நினைத்தாலும் அவர்களுடைய விரல்கள் அவர்களை அறியாமல் திமுக சின்னத்தில் தான் பொத்தானை அழுத்தும். எழுதப்படாத விதி அரசு ஊழியர்கள் திமுகவின் அடிமை என்பதுதான். நீங்கள் அரசு ஊழியர் ஆக இருந்தால் ஓட்டு போடும்போது உங்கள் விரல் உங்களை அறியாமல் அந்த சின்னத்திற்கு செல்கிறதா இல்லையா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை இடது சாரி சிந்தனையில் வாழ்ந்து விட்டால் அதன் பிறகு பரம்பரை பரம்பரையாக நீங்கள் திமுகவின் அடிமைதான். அரசு ஊழியர்களின் வார்த்தைகளுடன் சற்று அரசியல் பேசிப் பாருங்கள் இந்த உண்மை புரியும்.


Natarajan Ramanathan
பிப் 18, 2024 21:33

இந்த ஒரு காரணத்துக்காகவே உங்கள் அனைவரையும் சுட்டு கொன்றாலும் தப்பே இல்லை.


ramesh
பிப் 18, 2024 20:50

ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கை சரிதான்


ramesh
பிப் 18, 2024 20:49

திமுக வாழதான் அரசு ஊழியர் சம்பளம் உயர்ந்தது என்பது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும் .சம்பளம் போதவில்லை என்றால் அரசு வேலையே விட்டு விட்டு தனியாரிடம் வேலைக்கு போக வேண்டியது தானே .இளைஞர்கள் அனைவரும் காத்து கிடக்கிறார்கள்


Sivakumar
பிப் 18, 2024 20:41

Understand that nothing comes free. If you think Government and ruling party is still working for your welfare, look back at the assurances given by sister, son and head of the family during last election meetings for closing down liquor shops (as an example only). When someone asks for bribe, be smart not to trust such people with your future. Now you can read the first sentence again and decide why all this drama to force Head of the family to listen to your demands - WHO CARES for your demands???


rajan_subramanian manian
பிப் 18, 2024 17:36

இப்போது அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,காவல் துறை,போக்குவரத்து துறை ஊழியர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக மதம் மாறினால்(சிறுபான்மை) உதயநிதி பரிந்துரைத்து எதாவது சிறுபான்மை கோட்டாவில் போட்டுகுடுப்பர்


ramesh
பிப் 18, 2024 20:45

மத மாற்றம் இந்து மத விரோதி இதை தவிர ஒன்றுமே தெரியாதா. சாமி கும்பிட்டால் பொருளாதாரம் வளர்ந்து விடாது .அதற்கு திட்டமிடல் வேண்டும் அதுதான் பிஜேபியில் கிடையாதே


நரேந்திர பாரதி
பிப் 18, 2024 14:28

இப்போ நீட்டி முழங்கி என்ன பண்ணப்போறீங்க? புத்தி கெட்டுப்போன உங்களுக்கெல்லாம் ஜெயா பண்ண மாதிரி வேலையை காலி பண்ணி வீட்டுக்கு அனுப்பனும்...ஒரு பய ஒழுங்கா வேலை பாக்குறது இல்ல...வாத்தியார் வேலைய தவிர எல்லா வேலையும் செய்யுறீங்க நல்லா ஞாபகத்துல வச்சுக்குங்க.. படிச்சிட்டு நெறைய பேர் வாத்தியார் வேலைக்காக காத்திருக்குக்காங்க..


Rajarajan
பிப் 18, 2024 14:10

இந்த அவமானம் தேவையா ?? தேவையற்ற அரசு நிறுவனங்களை இழுத்து மூடியிருந்தால், பாதியை தனியாருக்கு கொடுத்திருந்தால், இந்நேரம் இந்த மிரட்டல் வந்திருக்குமா ?? வரி செலுத்தும் இயந்திரம் தனியார், அதை அனுபவிக்கும் உரிமை அரசு ஊழியர் மற்றும் அரசியல்வாதிகள். நல்ல நாடு.


g.s,rajan
பிப் 18, 2024 13:44

பாட்டி, காக்கா. வடை.... புரிந்தால் சரி .....


rama adhavan
பிப் 18, 2024 13:41

வளர்த்த கிடா(ஜாட்டோ ஜியோ)இப்போது மார்பில் பாய்கிறதோ? அப்போ கிடா விருந்து தான். மேலும் இவர்கள் தான் குறைந்த வோட் எண்ணிக்கையில் வென்றதற்கு காரணம் என்பதும் பொய். கள்ள ஓட்டு கூட காரணமாய் இருக்கலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை