உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் மழலையர் விழா

அரசு பள்ளியில் மழலையர் விழா

புதுச்சேரி, : கோரிமேடு இந்திராநகர், அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று மழலையர் விழா நடந்தது.விழாவில் வட்டம் 2ல் உள்ள 40 பள்ளிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 700 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பள்ளிக்குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்வில், பெற்றோர் பலர் பங்கேற்று, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.விழாவுக்கு, வட்டம் -2 துணை ஆய்வாளர் குணசுந்தரி தலைமை தாங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி மற்றும் விழாக்குழுவினர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்