உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / சுப்ரோடோ கால்பந்து எப்போது * கோவை மாணவர்கள் தேர்வு

சுப்ரோடோ கால்பந்து எப்போது * கோவை மாணவர்கள் தேர்வு

புதுடில்லி: சுப்ரோடோ கால்பந்து தொடரில் பங்கேற்க கோவை, தஞ்சாவூர் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சுப்ரோடோ கால்பந்து தொடரின் 63 வது சீசன் வரும் 5-14ல் நடக்க உள்ளது. இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் உட்பட 8 சர்வதேச அணிகளுடன், மொத்தம் 111 அணிகள் பங்கேற்க உள்ளன. மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கும். ஆக. 5-14ல் ஜூனியர் பெண்கள், செப். 2-11ல் ஜூனியர் ஆண்கள் போட்டி நடக்கும்.15 வயதுக்கு உட்பட்ட சப்--ஜூனியர் (ஆண்கள்) போட்டி இந்தாண்டு முதல் முறையாக (ஆக. 19-28) நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று டில்லியில் நடந்தது.இந்திய விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் நடக்க உள்ள இத்தொடரில் தமிழகத்தில் இருந்து ஜீனியர் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் பைனியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி, சப்--ஜூனியர் பிரிவில் தஞ்சாவூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை