உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஜோஷ்னா, அனாஹத் அபாரம் * இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில்...

ஜோஷ்னா, அனாஹத் அபாரம் * இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில்...

மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் அனாஹத் சிங், போலந்தின் கரினா டைமாவை சந்தித்தார். 17 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், அனாஹத், 3-0 என்ற (11-5, 111-, 11-4) நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை ஜோஷ்னா, ஸ்பெயினின் சோபியாவை 3-0 என (11-4, 11-6, 11-3) வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் தான்வி, காலிறுதியில் 4-11, 9-11, 8-11 என எகிப்தில் எல்ஹாம்மியிடம் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், எகிப்தின் முகமது ஜகாரியா மோதினர். 66 நிமிடம் நீடித்த இப்போட்டியில் வேலவன், 0-3 என்ற (7-11, 7-11, 6-11) நேர் செட்டில் வீழ்ந்தார். இந்தியாவின் ரமித் டான்டன், 2-3 என (5-11, 11-9, 11-3, 3-11, 5-11) என எகிப்தின் சொலைமானிடம் தோற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை