| ADDED : ஜூலை 12, 2024 10:09 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில், முழுநேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்குகின்றனர்.கிராமப்புற ரேஷன் கடைகளை பொறுத்தவரை, அரசு அறிவித்த நேரமான காலை 9:00 மணிக்கு திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து, வாயலுார் உய்யாலிகுப்பம் பகுதி வாசிகள் கூறியதாவது:இங்குள்ள ரேஷன் கடை 11:30 மணிக்கு மேல் தான் திறக்கப்படுறது. இதனால், வேலைக்கு செல்வோர் பொருட்கள் வாங்க முடியவில்லை. மேலும், எப்போது பொருட்கள் வழங்குகின்றனர் என்றும் தெரியவில்லை. கடையை குறித்த நேரத்தில் திறந்து, பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.