உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாளம் தெரியாத நபர் கார் மோதி பலி

அடையாளம் தெரியாத நபர் கார் மோதி பலி

சென்னை, அரியலுார் மாவட்டம், உடையார் பாளையத்தைச் சேர்ந்தவர் வீரமணி, 36; 'கால்டாக்சி' ஓட்டுனர். நேற்று அதிகாலை காரில், நான்கு பயணியரை அழைத்துக் கொண்டு, காமராஜர் சாலை வழியாக திருவொற்றியூர் நோக்கிச் சென்றார்.அப்போது, ராணி மேரி கல்லுாரி அருகே, சாலை நடுவே அமர்ந்திருந்தவரை கவனிக்காமல் மோதினார். இதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார், அந்த உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் வீரமணியை கைது செய்தனர். உயிரிழந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை