உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரத்த வாந்தி எடுத்து சிறைக்கைதி மரணம்

ரத்த வாந்தி எடுத்து சிறைக்கைதி மரணம்

புழல்,பள்ளிக்கரணை, நாராயணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 46. கடந்த மாதம், மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கில் கமலக்கண்ணனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ரத்த வாந்தி எடுத்து, கமலக்கண்ணன் மயக்கமடைந்தார். சிறை போலீசார் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், நேற்று உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை