உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓய்வு பெற்ற அதிகாரி மயங்கி விழுந்து மரணம் 

ஓய்வு பெற்ற அதிகாரி மயங்கி விழுந்து மரணம் 

சூளைமேடு:சென்னை, சூளைமேடு, சவுராஷ்டிரா நகரை சேர்ந்தவர் ராமலிங்கம்,74. இவர் பொதுப்பணித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.தினமும் மெரினா பகுதிக்கு நடைப்பயிற்சி செல்வதை இவர் வழக்கமாக வைத்திருந்தார். நேற்று முன் தினம் இரவு, மெரினாவில் ராமலிங்கம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். பின், எழிலகம் வழியாக வந்து நின்றார். அப்போது திடீரென அவர் அங்கு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், ராமலிங்கத்தை மீட்டு அருகில் உள்ள ஓமந்தூாரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் ராமலிங்கம் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.தகவலின் படி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி