| ADDED : நவ 26, 2025 03:06 AM
சென்னை: நாகையில் நடக்கும் கந்துாரி விழாவையொட்டி, சென்னை - வேளாங்கண்ணி, விழுப்புரம் - நாகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து, தெற்கு ரயில்வே அறிக்கை: எழும்பூரில் இருந்து வரும் 30ம் தேதி காலை 9:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 5:30 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். வேளாங்கண்ணியில் இருந்து வரும் டிச., 1ம் தேதி காலை 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் மாலை 3:15 மணிக்கு எழும்பூர் செல்லும். இந்த சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும். விழுப்புரத்தில் இருந்து வரும் 30ம் தேதி காலை 9:10 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:05 மணிக்கு நாகப்பட்டினம் செல்லும். நாகையில் இருந்து வரும் 30ம் தேதி மதியம் 1:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் மாலை 5:30 மணிக்கு விழுப்புரம் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 3 ரயில்கள் இன்று ரத்து ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மூன்று மின்சார ரயில்களின் சேவை, இன்று ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை : அரக்கோரணம் ரயில்வே பணிமனையில் இன்று இரவு 11:30 மணி முதல் நாளை அதிகாலை 2:30 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், வழித்தடத் தில், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் - அரக்கோணம் இன்று இரவு 10:00, அரக் கோணம் - சென்ட்ரல் இரவு 9:4 5 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல் - அரக்கோணம் இரவு 10:55 மணி ரயில் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.