உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேப்பிலை நாகராஜர் கோவிலில் ஆண்டு விழா

வேப்பிலை நாகராஜர் கோவிலில் ஆண்டு விழா

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, இம்மிடிபாளையத்தில் உள்ள வேப்பிலை நாகராஜர் கோவிலில் ஆண்டு விழா நேற்று நடந்தது.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சி, இம்மிடிபாளையத்தில் உள்ள வேப்பிலை நாகராஜர் கோவிலில்,14ம் ஆண்டு விழா நிகழ்ச்சி, கடந்த26ம் தேதி துவங்கியது. இதில், சக்தி கலசம் அழைத்து வரப்பட்டது.27ம் தேதி, பட்டு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர். நேற்று,சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை