உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிரம்பி ததும்பும் சோலையாறு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி

நிரம்பி ததும்பும் சோலையாறு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறை;வால்பாறையில், தொடர் மழையின் காரணமாக, சோலையாறு அணை கடந்த 19ம் தேதி அதிகாலை நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல் டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.மழை நீடிக்கும் நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 162.56 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 4,302 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.அணையிலிருந்து வினாடிக்கு, 4,735 கன அடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சோலையாறு அணை கடந்த 4 நாட்களாக நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால் பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை