உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்

மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே விமானப்படையினர் மேற்கொண்ட பயிற்சி, மோசமான வானிலை காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்டது.தஞ்சாவூர் விமானப்படை பிரிவு பயிற்சி அதிகாரிகள் ஹெலிகாப்டர் பயிற்சி மேற்கொள்வதற்காக நேற்று கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம், மேலுார், மருதத்துார் வயல்வெளிப்பகுதிக்கு வந்தனர். மதியம் 1:00 மணிக்கு பயிற்சியை துவங்கிய நிலையில், மோசமான வானிலை காரணமாக சற்று நேரத்திலேயே பயிற்சி நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் திரும்பி சென்றனர். பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால், சுற்று வட்டார கிராம மக்கள் அச்சமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை