உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருட சேவை உற்சவம்

கருட சேவை உற்சவம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்திபெற்ற பூவராகசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவமான நேற்று கருட சேவை நடந்தது. இரவு நடந்த உற்சவத்தில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சித்திரை விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 21ம் தேதி காலை தேர்திருவிழாவும், 23ம் தேதி மதியம் மட்டையடி உற்சவம், இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை