உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது

விருத்தாசலம் : கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரை சேர்ந்தவர் செல்வகுமார், 30; இவரது மனைவி அனிதா,28; கடந்தாண்டு திருமணம் நடந்த நிலையில், அனிதா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில்,் செல்வகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த அனிதா கண்டித்தார்.இதில், ஆத்திரமடைந்த செல்வகுமார், தாய் ஜான்சி மேரி, சகோதரி கிரேசி ஆகியோர் சேர்ந்து அனிதாவை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர். மேலும், ஜான்சி மேரி, கிரேசி ஆகியோரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி