பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.இதேபோன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில்களில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. நடுவீரப்பட்டு
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர்,சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர்,மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு விநாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன், பிரதோஷ நாயகர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உட்பிரகார உலாவாக வந்து அருள்பாலித்தார். பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.