| ADDED : பிப் 15, 2024 06:54 AM
திட்டக்குடி : வீடு புகுந்து பெண்ணின் தாலி செயின் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மனைவி நித்யா, 25; மணிவேல் வெளிநாட்டில் உள்ளார். நித்யா தனது ஒருவயது குழந்தை, மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் மூவரும் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நழைந்த மர்மநபர்கள், பூஜை அறையிலிருந்து 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடினர். மேலும், துாங்கிக்கொண்டிருந்த நித்யாவின் கழுத்திலிருந்து ஏழரை சவரன் தாலி செயினை பறித்தனர். திடுக்கிட்டு எழுந்த நித்யா, கூச்சலிட முயன்றபோது கத்தியைக்காட்டி மிரட்டி தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.