உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் குஷ்பு படம் எரிப்பு

நெய்வேலியில் குஷ்பு படம் எரிப்பு

நெய்வேலி: நெய்வேலியில், மகளிர் உதவித்தொகை குறித்து அவதூறாக பேசியதாக, பா.ஜ., பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து தி.மு.க., மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிலோமினா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் குஷ்புவின் படத்தை மகளிரணியினர் தீ வைத்து எரித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி துணை அமைப்பாளர் பரிமளா, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ராஜலட்சுமி, மகளிரணி நிர்வாகிகள் நவநீதம், சக்தி, ஜெயந்தி, தேவயானி உள்ளிட்ட மகளிரணியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை