உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  டிராக்டர் மீது மோதி ஒருவர் படுகாயம்

 டிராக்டர் மீது மோதி ஒருவர் படுகாயம்

குறிஞ்சிப்பாடி: டிராக்டர் மீது பைக் மோதியதில், ஒருவர் படுகாயமடைந்தார். குறிஞ்சிப்பாடி, கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50; இவர் நேற்று முன்தினம் கடலுார்-விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றார். அப்போது முன்னால் சென்ற டிராக்டர் ஒன்று திடீரென நிறுத்தியதால், அதன் பின்புறம் ரவிச்சந்திரன் சென்ற பைக் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் புதுச்சேரி தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுனர் மீது, குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை