உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவால் 23 நாட்களுக்கு பின் பரிசல் பயணம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவால் 23 நாட்களுக்கு பின் பரிசல் பயணம்

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 8,000 கன அடி-யாக சரிந்ததால், 23 நாட்களுக்கு பிறகு, காவிரியாற்றில் பரிசல் பயணம் தொடங்கியது.கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்-பட்டுள்ளது. நேற்று முன்தினம், கபினி அணையிலிருந்து வினா-டிக்கு, 2,729 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினா-டிக்கு, 5,346 கன அடி என மொத்தம், 8,075 கன அடி உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 10:00 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு, 8,000 கன அடியாக இருந்தது. இதனால், ஒகேனக்கல்லில், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்-பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்ப-ரித்து கொட்டியது. கடந்த, சில நாட்களுக்கு முன் வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக இருந்த நீர்வரத்து, தற்போது, 8,000 கன அடியாக குறைந்த நிலையில் நேற்று, 23 நாட்களுக்கு பிறகு, காவிரியாற்றில் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்-வாகம் அனுமதி அளித்துள்ளது.தொடர் வெள்ளப்பெருக்கின் போது, நீர்வீழ்ச்சி பகுதி சேதம-டைந்ததால், 24 வது நாளாக அருவியில் குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது. பரிசல் பயணத்தை பென்னாகரம், பா.ம.க., எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை